'ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்பது ஒளவையாரின் கூற்று. ஆண்டவன் பற்பல ஊர்களில் கோவில் கொண்டுள்ளான். ஒரே இடத்தில் கோவில் கொண்டால் என்ன?
அதற்கு காரணம் இருக்கிறது. மக்கள் ஒரே இடத்தில் இருக்காமல் பற்பல இடங்களுக்குச் சென்றால்தான் பொது அறிவு வளரும். மனமகிழ்ச்சியும் கிடைக்கும். வெறுமனே யாரும் பணம் செலவழித்துக் கொண்டு செல்ல மாட்டார்கள். ஏதாவது ஆதாயம் கிடைக்காதா என்றுதான் எதிர்பார்பார்கள். ஆனால் கோவில் என்றால் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் செல்வார்கள். ஏனெனில் புண்ணியம் என்னும் ஆதாயம் கிடைக்கிறதல்லவா? ஆனால் எல்லா ஆலயங்களுக்கும் எல்லோராலேயும் செல்ல முடியாது. அவர்களை அந்த ஆலயங்களுக்கு இலவசமாக அல்லது மிகக் குறைந்த கட்டணத்தில் அழைத்துச்செல்ல சென்னை ஆலயங்கள் வார இதழ் வெகு விரைவில் வெளிவரவுள்ளது.
இதன் முக்கிய குறிக்கோள்கள்
சென்னையில் உள்ள அனைத்து ஆலயங்கள் மற்றும் அங்கு நடைபெறும் திருவிழா பற்றிய விவரங்களை வாரந்தோறும் வெளியிடுதல். அந்த ஆலயங்களுக்கு பக்தர்களை இலவசமாகவோ அல்லது மிக மிக குறைந்த கட்டணத்திலோ அழைத்து செல்லுதல்.
அந்த ஆலயங்களில் பல கைங்கர்யங்களை மேற்கொள்ளுதல் சென்னையின் அனைத்து பகுதிகளிலும் பல பக்தி நெறி நிகழ்ச்சிகளை நடத்துதல்.
பக்தர்கள் குழு
இந்த இதழுக்கு தகவல் சேர்க்கவும் ஒவ்வொரு ஆலயத்திற்கு மேற்கொள்ளவேண்டிய கைங்கர்யங்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும் ஒவ்வொரு இறைவனுடைய பக்தர்கள் குழு அமைக்கப்படவுள்ளது. பெருமாள் பக்தர்கள் குழு சிவன் பக்தர்கள் குழு, முருகர் பக்தர்கள் குழு, ஆஞ்சநேயர் பக்தர்கள் குழு , ராகவேந்திரர் பக்தர்கள் குழு ஐயப்பன் பக்தர்கள் குழு, திவ்ய நாம சங்கீர்த்தன குழு இப்படி எல்லா தெய்வங்களுக்கும் பக்தர்கள் குழு ஒவ்வொரு ஊரிலும் அமைக்கப்படும். இந்தக்குழுக்களை பக்தர்களே அமைத்து கொள்ளலாம். இவ்வாறு அமைப்பதில் நிறைய ஆதாயங்கள் உண்டு. அது சென்னை ஆலயங்கள் முதல் இதழில் வெளியிடப்படும்.
இந்த குழுக்களை உங்கள் ஊரில் அமைக்க உடனடியாக எங்களை அணுகவும். மேலும் விவரங்களுக்கு நேரடியாகவோ தொலைபேசி மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ தொடர்பு கொள்ளுங்கள்.
- பதிப்பகத்தார்
0 comments:
Post a Comment