ராமர் வனவாசம் புறப்பட்டதும் சீதை தானும் உடன் வருவதாகக் கூறினாள். அதற்கு ராமர் மறுத்ததும், ராமர் இருக்கும் இடம்தான் தனக்கு அயோத்தி, அதனால் தானும் உடன் வருவதாகக் கூறினாள். சரி என்று இராமரும் சம்மதித்தார். இதன்படி பார்த்தால் ஊர்மிளையும் லட்சுமணனுடன் சென்றிருக்க வேண்டுமே? ஏன் செல்லவில்லை?
சீதை இராமருடன் வருகிறேன் என்பதற்கு அவர் இருக்கும் இடம்டதான் அயோத்தி என்பதல்ல. சீதை இவ்வாறு நினைத்தாளாம், ''இவர் தனக்கு பட்டாபிஷேகம் இல்லை என்றதும் அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டாரா, அல்லது மனதிலேயே அந்த ஏமாற்றத்தை அடக்கிக்கொண்டுள்ளாரா என்று தெரியவில்லை. காரணம் சாதாரணமாக எடுத்துக்கொண்டிருந்தால் பரவாயில்லை. அதுவே மனதிலேயே வைத்துக் கொண்டிருந்தால் மிகவும் ஆபத்து. ஒருவன் அலுவலகத்தில் மேலதிகாரியிடம் திட்டுவாங்கியிருந்தால் அவரை எதிர்த்துப் பேசமுடியாமல் இருப்பார். அதை அடக்கிக் கொண்டு வீட்டிற்கு வந்ததும் சிறுசிறு விஷயங்களுக்கெல்லாம் எரிந்து விழுவார். அதுவே பாராட்டு வாங்கியிருந்தால் வீட்டில் சந்ததோஷ மழைதான். அதாவது பட்டாசு வெடித்துவிட்டால் பரவாயில்லை. வெடிக்காவிட்டால் கிட்டே பேகலாமா, வேண்டாமா என்று குழப்பமாக இருக்கும். அதுபோல பட்டாபிஷேகம் தனக்குக் கிடைக்கவில்லை என்ற ஏமாற்றம் அவர் மனதில் பதிந்துவிட்டால் மிகவும் ஆபத்து. காரணம் இவர் காட்டிற்கு போகும் பொழுது எதிரே ஒருவன் வந்து இவரை நலம் விசாரித்தால், 'அடப் போங்கடா, நானே பட்டாபிஷேகம் கிடைக்காம வெறுப்பில இருகிறேன். அதைப் புரிஞ்சுக்காம நீ வேற குறுக்கே வந்து நலம் விசாரிக்கிறே. போ போ' என்று எரிந்து விழுவாரோ? அப்படி எரிந்து விழுந்தால் நாம் அவரிடம் 'ஏங்க, இவனிடம் எரிந்து விழுகிறீர்கள். ராஜ சிம்மாசனம் கிடைக்காவிட்டால் என்ன? மக்களின் மனதில் கொலு வீற்றிருக்கிறீர்களே, அதைவிட ராஜ சிம்மாசனம் எந்த விதத்தில் உயர்ந்தது? நீங்களும் அது கிடைக்கவில்லை என்று வருத்தப்படுகிறீர்களே. இதோ வந்திருக்கிறான் உங்கள் உங்கள் பக்தன். அவனை காத்து ரட்சியுங்கள்' என்று சொல்லவேண்டும்''.
இப்படியாகக் கூறி, அவரை சமாதானப்படுத்தத்தான் தானும் அவருடன் வருவேன் என்று சீதை பிடிவாதம் பிடித்தார். சீதை யார்? சாட்சாத் லஷ்மி பிராட்டியார்தானே. தாயாராயிற்றே, கருணை உள்ளம் படைத்தவராயிற்றே!
Labels: இராமர்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment