நாம சங்கீர்த்தனத்தின் மகிமை

இப்பொழுது பல இடங்களில் திவ்ய நாம சங்கீர்த்தனங்கள் நடைபெறுகின்றன. இதனுடைய அடிப்படைத் தத்துவம் மற்றும் மகிமையை இங்கே பார்க்கலாம்.
எல்லோரும் விரும்புவது கடைசி காலத்தில் இறைவனுடன் ஐக்கியமாக வேண்டும், மீண்டும் பிறவா வரம் வேண்டும் என்பதே. ஆனால் அதற்கு கடும் தவம் புரியவேண்டும். ஆனால் கலியுகத்தில் இயந்திரமயமான வாழ்க்கையில் இருக்கும் நம்மால் அவ்வாறு தவம் புரிய முடியுமா? அதனால் இறைவன் நமக்காக விதிமுறையை தளர்த்திக்கொள்கிறார். என்னவெனில், Ôகலியுகத்தில் எனது பெயரைச் சொன்னாலே போதும், முக்தி கிடைத்துவிடும்Õ என்று. இது ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை ஒரு ரூபாய்க்கு விற்பது போன்றது போலத்தானே?

ஆனால் நம்மில் பலர் அந்த ஒரு ரூபாய் கொடுக்கக்கூட மனமில்லாமல், அந்தப் பொருள் கிடைக்கவில்லையே என்று புலம்புகிறார்கள். அப்படியும் பகவான் அவர்களை விடவில்லை. எனது நாமாவை சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. அதை காதாலே சற்று கேள். இது எப்படி இருக்கிறது என்றால், ஒரு ரூபாய் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, அந்த ஒரு ரூபாயை கண்ணிலாவது காட்டு என்று கூறுவதைப் போல் உள்ளது.

பார்த்தீர்களா, இந்த அளவு இறைவன் நமக்காக இறங்கி வருகிறான். ஆகவே பகவானின் நாமத்தை உச்சரிப்போம். உயர்ந்த நிலையை அடைவோம்.
இங்கு ஒரு கேள்வி எழலாம். பகவானின் நாமம் ஒன்று மட்டும் போதும் என்றால் பின் வேத பாராயணம், உபநிஷத்துக்கள், ஸஹஸ்ர நாம பாராயணம், திவ்யப் பிரபந்த பாராயணம் இவைகள் எதற்கு இல்லையா?

உதாரணமாக நாம் பேருந்திற்காக காத்திருக்கிறோம். வரக்கூடிய பேருந்துகளெல்லாம் உள்ளே ஏறமுடியாமல் கூட்டமாக வருகின்றன. நேரம் ஆகிக்கொண்டேயிருக்கிறது. காலியாக பேருந்து எதுவும் வருவதாகத் தெரியவில்லை. என்ன செய்கிறோம்? கூட்டமாக இருந்தாலும் பரவாயில்¬ என்று ஒரு கம்பியைப் பிடித்துக்கொண்டு படியில் ஒரு காலை வைத்தாவது ஏறிவிடுகிறோம். அடுத்த நிறுத்தம் வந்தவுடன் சிலர் இறங்க சற்று வசதியாக நிற்க இடம் கிடைக்கிறது. இன்னும் சில நிறுத்தங்கள் வந்தவுடன் பலர் இறங்க, அமருவதற்கு இடம் கிடைத்துவிடுகிறது. ஒரு இடத்திற்கு உடனே போகவேண்டும் என்கிற குறிக்கோளும் நிறைவேறி விடுகிறது.
இதுதான் நாம சங்கீர்த்தனத்தின் தத்துவம். அதாவது 'படியில் ஒரு காலை வைத்து பேருந்தில் ஏறிவிடு. பிறகு நான் இடம் பிடித்துத் தருகிறேன்' என்கிறார் இறைவன்.
ஆன்மீகம் என்னும் பேருந்தில் நுழைய படிக்கட்டில் காலை வைப்பது, பகவான் நாமத்தைக் கூறுவது போல. முழுப் பயணமும் படிக்கட்டிலேயே கழிக்கிறோமா? இல்லையே. உள்ளே வந்து வசதியாக இருக்கையில் அமர முயற்சிக்கிறோம். அது போல் பகவான் நாமாவை சொல்லி ஆன்மீகப் பேருந்தில் ஏறுகிறோம். பிறகு படிப்படியாக முன்னேறி பல நூல்களைப் படித்து உயர்ந்த நிலைக்கு வருகிறோம். ஆக, பகவானின் நாமாவைக் கூறுவது ஆன்மிகப் படிப்பில் முதல் வகுப்பு.

சரி, வீட்டிலேயே நாம் மட்டும் பகவான் நாமாவைக் கூறினால் என்ன? ஒரு பெரிய மண்டபத்தில் எல்லோருடனும் சேர்ந்துதான் சொல்ல வேண்டுமா?
வீட்டிலேயே தொலைக்காட்சிப் பெட்டியில் கிரிக்கெட் பந்தயம் பார்க்கிறீர்கள். ஒரு வீரர் சதம் அடிக்கிறார். அப்பொழுது நீங்கள் மகிழ்ச்சியடைகிறீர்கள். அதே சமயம் மைதானத்தில் பார்த்தால் எத்தனை பேர் வயது வேறுபாடின்றி துள்ளிக் குதித்து மகிழ்ச்சிடைகிறார்கள். நீங்கள் வீட்டில் தனிமையில் மகிழ்ச்சிடைகிறீர்கள். இதில் எந்த மகிழ்ச்சி சிறந்தது? நீங்கள் தனிமையில் அடையும் மகிழ்ச்சி உண்மையான மகிழ்ச்சியில்லை. அரங்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் சேர்ந்து மகிழ்கிறோமே அதுதான் உண்மையான மகிழ்ச்சி. ஒரு திரைப்பாடல் இருக்கிறதே, 'தனிமையிலே இனிமை காண முடியுமா?' என்று. தனிமையிலே நீங்கள் பெற்றது ஆனந்தம் என்றால், அரங்கத்தில் பெறுவது பரமானந்தம். மேலும் அனைவருடன் சேர்ந்து அனுபவிக்கும்பொழுது பல விஷயங்களை அறிந்து கொள்கிறோம். பல பெரியவர்களுடன் கலந்து பழகும் வாய்ப்பு கிட்டுகிறது. அதனால் நமது மனம் பக்குவம் அடைந்து ஞானத்தைப் பெறுகிறது. விளைவு விரைவில் பலர் வணங்கும் நிலைமைக்கு உயர்ந்து விடுகிறோம் (இதைத்தான் பெரியவர்கள் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்கிறார்கள்). பார்த்தீர்களா, வெறும் பகவானின் நாமம் மட்டுமே நம்மை எவ்வளவு உயர்த்துகிறது?

சரி, இந்த நாம சங்கீர்த்தனம் எப்படி கேட்க வேண்டும் தெரியுமா? வெறுமனே கச்சேரி கேட்பது போல் அல்ல. முதலில் பாகவதர் பாடும் பொழுது கேட்கவேண்டும். பிறகு வேகமாக நாமாவளி பாடும் பொழுது இரு கைகளையும் மேலே தூக்கி தாளமடிஜீட்டு வேகமாக நாமும் பாட வேண்டும். அது மட்டுமில்லை, அந்த நேரத்தில் அனைவரும் எழுந்து கொண்டு குதித்துக் குதித்து நாமாவளியை வாய்விட்டுப் பாடவேண்டும்.

இது எதற்காக தெரியுமா? இப்பொழுது பலருக்கு மன உளைச்சல் வருகிறது. ஆங்கிலத்தில் பீமீஜீக்ஷீமீssவீஷீஸீ என்பார்கள். அதற்கு மருத்துவரிடம் சென்று ஆயிரக் கணக்கில் செலவு செய்து மருந்து மாத்திரை வாங்கி சாப்பிடுவார்கள். இலவசமான மருத்துவம் நாம சங்கீர்த்தனத்தில் கிடைக்கிறது என்று அவர்கள் அறிவதில்லை.

ஆம். இப்படி துள்ளிக் குதித்து வாய்விட்டு நாமாவளியை பாடும் பொழுது நம்முடைய மனப்பாரம் நிறைய குறைந்து விடுகிறது. இதை அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும். பல வருடங்களுக்கு முன் ஒரு பத்திரிக்கையில் படித்தது. இப்பொழுது பல இடங்களில் நகைச்சுவை மன்றங்கள் உள்ளன. வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பார்கள். ஆனால் வெளிநாட்டில் ஒரு மன்றம் அறிக்கிறதாம். அழும் மன்றம். அதில் அனைவரும் கூடி அழுவார்களாம். இது என்ன விந்தையாக இருக்கிறது என்கிறீர்களா?

ஆம். விந்தைதான். 'பாலும் பழமும்' திரைப்படத்தில் 'காதல் சிறகை காற்றினில் விரித்து..' என்கிற பாடலில் ஒரு வரி வரும். 'பிரிந்தவர் மீண்டும் சேரும் பொழுது அழுதால் கொஞ்சம் நிம்மதி' என்று. ஆம், நாம் எத்தனையோ பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டு முழிக்கிறோம். அதிலிருந்து மீள வேண்டாமா? அதற்கு முதலில் அவைகளை மறக்க வேண்டும். அதாவது மனதிலிருந்து அவைகளை வெளியே கொட்ட வேண்டும். ஆனால் கேட்பதற்கு யாரும் இல்லாவிட்டால் எப்படி கொட்டுவது? அதற்குத்தான் அந்த நிகழ்ச்சி. இரவு ஏழு மணிக்குத் துவங்கும். நமது நாம சங்கீர்த்தனம் போல் அவர்களது இறைவனைக் குறித்து பாடுவார்கள். பிறகு விளக்குகளில் ஒளி சிறிது சிறிதாக அருகில் இருப்பவர் முகம் சரியாகத் தெரியாதவாறு குறைப்பார்கள். உடனே நாமாவளி போல் சிலர் பாட எல்லோரும் கையைத் தூக்கி வாய்விட்டு அழுவார்களாம். பிறகு ஐந்து நிமிடம் கழித்து பாட்டு நின்றுவிடும். அடுத்த ஐந்து நிமிடம் மக்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வார்களாம். பிறகு படிப்படியாக விளக்குகளின் ஒளி அதிகரிக்கும். இது போன்று ஐந்தாறு தடவை நடக்குமாம். அதில் கலந்து கொண்டபின் பலர் தங்களுடைய மனப்பாரம் குறைந்து ஆனந்தம் அடைந்துள்ளதாகக் கூறுகிறார்கள்.

ஆக, திவ்ய நாம சங்கீர்தனம் நடத்துவது, ஏதோ பொழுது போக்கு விஷயம், என்று சாதாரணமாக எண்ணிவிடாதீர்கள். அது நடப்பது இலவச மனஉளைச்சல் மருத்துவ முகாம் என்று கூறலாம். அதனால்தான் பலர் கஷ்டப்பட்டாவது அதை விடாமல் நடத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நடத்துகிறார்கள். அதற்கு நம்மால் முடிந்த ஆதரவை நாம் தரவேண்டும்.

0 comments: